எட்டு கட்டங்களாக நடைபெறும் செரிமானத்தின் முதல் நிலை, உணவை நன்கு மெல்லுவதுதான். உணவு நம் வாயைத் தாண்டி விட்டால், மற்ற உறுப்புகள் எல்லாம் அனிச்சையாகச் செயல்படும். நன்கு மென்று சாப்பிடுவது மட்டும்தான் நம் கடமை. ‘உணவை ஏன் மெல்ல வேண்டும்... செரிமான மண்டலம்தான் வலிமையானதாயிற்றே... எந்த ஓர் உணவையும் அரைத்துச் சக்கையை வெளியே தள்ளுமே?’ என்ற சந்தேகம் பலருக்கும் எழலாம். உணவு என்பது பல சங்கிலிகளால் ஆனது. ஒன்றுக்கொன்று மிகவும் இறுக்கமான பிணைப்பில் இருக்கும். மாவுச்சத்து கொஞ்சம் சாதாரணப் பிணைப்பில் இருக்கும்; புரதச்சத்து மிகவும் நெருக்கமான பிணைப்பிலும், கொழுப்புச்சத்து மற்ற இரண்டைவிட மிக நெருக்கமான பிணைப்பிலும் இருக்கும். எனவேதான், மாவுச்சத்து எளிதில் செரிமானம் அடைகிறது.
நன்றாக மெல்லும்போதுதான் உணவின் முழுச்சுவை தெரியும். உமிழ்நீர் நன்றாகச் சுரக்கும். நாம் பற்களால் கடித்து, அரைத்த உணவை உமிழ்நீர்தான் எளிதாக உணவுக்குழாய் வழியாகத் தள்ளுவதற்கு உறுதுணையாக இருக்கும். உமிழ்நீரோடு கலந்த உணவை இரைப்பை எளிதாக அமிலங்கள் துணையோடு பாகுபோல மாற்றிவிடும். மனிதனுக்கு ஒரு நாளைக்கு சராசரியாக 1 - 1.5 லிட்டர் உமிழ்நீர் சுரக்கிறது. நன்றாக மெல்லாமல் விழுங்கும்போது உணவும் அரைபடாது, உமிழ்நீரும் கிடைக்காது என்பதால் உணவுக்குழாய் அடைத்துக்கொள்ளும். இரைப்பை கடினமாக வேலைசெய்து, பெப்ஸின் மற்றும் சில அமிலங்களைப் பயன்படுத்தி உணவைச் சிதைத்துக் கூழாக்கும்.
ஏதோ ஓரிருநாள் என்றால் பிரச்னை இல்லை. ஆனால், ஒருவர் எப்போதுமே வேகமாக மெல்லாமல் உணவை விழுங்குகிறார் எனில், செரிமான மண்டலம் எப்போதுமே ஓவர்டைம் வேலைபார்க்கும் நிலை ஏற்படும். இதனால், செரிமான உறுப்புகள் விரைவில் பாதிப்படையும். செரிமான மண்டலத்தில் சிறிய பாதிப்பு ஏற்பட்டாலும், நம் அன்றாட வேலைகளைச் செய்ய முடியாது. எனவே, செரிமான மண்டலத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க வேண்டும்.
ஏதோ ஓரிருநாள் என்றால் பிரச்னை இல்லை. ஆனால், ஒருவர் எப்போதுமே வேகமாக மெல்லாமல் உணவை விழுங்குகிறார் எனில், செரிமான மண்டலம் எப்போதுமே ஓவர்டைம் வேலைபார்க்கும் நிலை ஏற்படும். இதனால், செரிமான உறுப்புகள் விரைவில் பாதிப்படையும். செரிமான மண்டலத்தில் சிறிய பாதிப்பு ஏற்பட்டாலும், நம் அன்றாட வேலைகளைச் செய்ய முடியாது. எனவே, செரிமான மண்டலத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க வேண்டும்.
எத்தனை முறை மெல்லுவது ?
உணவை இப்படித்தான் மெல்ல வேண்டும், இத்தனை முறை மெல்ல வேண்டும் என எந்த விதிமுறையும் இல்லை. உணவு உட்கொள்வதை இயல்பாக, நிதானமாக, அமைதியாக அனுபவித்து, ரசித்துச் செய்தாலே போதும்.
‘நொறுக்குத் தீனிகள்’ ஏன் பிரபலம்?
உணவை இப்படித்தான் மெல்ல வேண்டும், இத்தனை முறை மெல்ல வேண்டும் என எந்த விதிமுறையும் இல்லை. உணவு உட்கொள்வதை இயல்பாக, நிதானமாக, அமைதியாக அனுபவித்து, ரசித்துச் செய்தாலே போதும்.
‘நொறுக்குத் தீனிகள்’ ஏன் பிரபலம்?
ஆவலாகக் கடிப்பது அன்பின் வெளிப்பாடுகூட. மனிதனின் ஆசையும் ஆவேசமும் பல்லால் நொறுக்குதல், அரைத்தல் போன்றவற்றால் கட்டுப்படுகிறது. சிப்ஸ், முறுக்கை நொறுக்கும்போது அவை எழுப்பும் சில ஒலிகள் மூளைக்கு அமைதி தருகின்றன.
ஆழ்மனக் கோபத்தையும் ஆதங்கத்தையும் மாற்றிட, சிலர் அதீதமாக மெல்லுவார்கள். நொறுக்குத்தீனிகளை நாம் எப்போதும் முற்றாகப் புறக்கணித்துவிட முடியாது. நட்ஸ், சிறுதானிய ஸ்நாக்ஸ் என ஆரோக்கியம் தருவதாக மாற்றிக்கொள்ள வேண்டும்.
அவசரமாய் அள்ளி விழுங்கினால் என்ன ஆகும்?
‘பல் ஆறினால்தான் பசியாறும்’ என்பார்கள். மாலை வேளையில் பட்டாணி போன்றவற்றை மென்றுகொண்டே இருந்தால், எளிதில் பசி ஆறுவதை நாம் உணர முடியும். அவசரமாகச் சாப்பிட்டால், பசியாறுவதை மூளை உணராமல் இன்னும் சாப்பிடத் தூண்டும். இதனால், அதிகமாகச் சாப்பிடுவதால் செரிமானம் ஆக நேரம் ஆகும். அவசரமாகச் சாப்பிடுவது மூளையையும் பதற்றத்துக்கு தள்ளி, உடல் மற்றும் மனதளவில் உபாதைகளை ஏற்படுத்தும்.
சாப்பிடும்போது தண்ணீர் அருந்தலாமா ?
உணவை நன்கு அரைத்துச் சாப்பிடுபவர்களுக்குத் தண்ணீர் தேவைப்படாது. சாப்பிடும்போது அதிகம் பேசக் கூடாது. தண்ணீரை அண்ணாந்து, தூக்கிக் குடிக்கக் கூடாது. ஏனெனில், காற்றை நாம் விழுங்கினால் வயிற்று உப்புசம், ஏப்பம் போன்றவை ஏற்படும். உணவை வாய்க்குள்வைத்து, வாயைத் திறக்காமல் நன்றாக மென்று சாப்பிடுவதுதான் சிறந்த வழிமுறை.
சாப்பிடுவதற்கு எவ்வளவு நேரம் எடுத்துக்கொள்ள வேண்டும்?
ஒவ்வொரு வேளையும் குறைந்தபட்சம் 20 முதல் 30 நிமிடங்கள் வரை சாப்பிடுவதுதான் சிறப்பான வழிமுறை.
குடும்பத்தோடு, நண்பர்களோடு அமர்ந்து சாப்பிடுவது நல்லது. நீங்களாக விரும்பி யாரோடு சேர்ந்து அடிக்கடி சாப்பிடுகிறீர்களோ, அவர் மேல்தான் அதிகப் பிரியம்வைத்திருக்கிறீர்கள் என்பது உளவியல் உண்மை. தினமும் 24 மணி நேரத்தில் ஒரு மணி நேரமாவது உட்கார்ந்து சாப்பிடுவதற்கு மட்டும் ஒதுக்கிவிடுங்கள். தினமும் 10 நிமிடங்களுக்குள் அவசர அவசரமாக உடலுக்கு எரிபொருள் நிரப்பிக்கொண்டு செல்லும் பழக்கத்தைத் தவிருங்கள்.
அவசரமாய் அள்ளி விழுங்கினால் என்ன ஆகும்?
‘பல் ஆறினால்தான் பசியாறும்’ என்பார்கள். மாலை வேளையில் பட்டாணி போன்றவற்றை மென்றுகொண்டே இருந்தால், எளிதில் பசி ஆறுவதை நாம் உணர முடியும். அவசரமாகச் சாப்பிட்டால், பசியாறுவதை மூளை உணராமல் இன்னும் சாப்பிடத் தூண்டும். இதனால், அதிகமாகச் சாப்பிடுவதால் செரிமானம் ஆக நேரம் ஆகும். அவசரமாகச் சாப்பிடுவது மூளையையும் பதற்றத்துக்கு தள்ளி, உடல் மற்றும் மனதளவில் உபாதைகளை ஏற்படுத்தும்.
சாப்பிடும்போது தண்ணீர் அருந்தலாமா ?
உணவை நன்கு அரைத்துச் சாப்பிடுபவர்களுக்குத் தண்ணீர் தேவைப்படாது. சாப்பிடும்போது அதிகம் பேசக் கூடாது. தண்ணீரை அண்ணாந்து, தூக்கிக் குடிக்கக் கூடாது. ஏனெனில், காற்றை நாம் விழுங்கினால் வயிற்று உப்புசம், ஏப்பம் போன்றவை ஏற்படும். உணவை வாய்க்குள்வைத்து, வாயைத் திறக்காமல் நன்றாக மென்று சாப்பிடுவதுதான் சிறந்த வழிமுறை.
சாப்பிடுவதற்கு எவ்வளவு நேரம் எடுத்துக்கொள்ள வேண்டும்?
ஒவ்வொரு வேளையும் குறைந்தபட்சம் 20 முதல் 30 நிமிடங்கள் வரை சாப்பிடுவதுதான் சிறப்பான வழிமுறை.
குடும்பத்தோடு, நண்பர்களோடு அமர்ந்து சாப்பிடுவது நல்லது. நீங்களாக விரும்பி யாரோடு சேர்ந்து அடிக்கடி சாப்பிடுகிறீர்களோ, அவர் மேல்தான் அதிகப் பிரியம்வைத்திருக்கிறீர்கள் என்பது உளவியல் உண்மை. தினமும் 24 மணி நேரத்தில் ஒரு மணி நேரமாவது உட்கார்ந்து சாப்பிடுவதற்கு மட்டும் ஒதுக்கிவிடுங்கள். தினமும் 10 நிமிடங்களுக்குள் அவசர அவசரமாக உடலுக்கு எரிபொருள் நிரப்பிக்கொண்டு செல்லும் பழக்கத்தைத் தவிருங்கள்.
Hard Rock Hotel & Casino Tulsa, OK - MapyRO
ReplyDeleteHard Rock Hotel & 고양 출장샵 Casino Tulsa is a Wedding Venue in Tulsa, 태백 출장샵 Oklahoma, USA and 포천 출장샵 features 3 bars, a restaurant, and a lounge. Find 수원 출장마사지 address, 화성 출장마사지 Phone number,