ஒரு நாளை எவ்வாறு செலவிடுகிறோம் எனப் பட்டியலிட்டுப் பாருங்கள். குழந்தைப் பருவத்திலிருந்து தொடங்கிய பழக்கங்கள் என்னென்ன... வளரும் பருவத்தில் கற்றுக்கொண்டவை என்னென்ன... நண்பர் மற்றும் உறவினர்களிடமிருந்து கற்றுக்கொண்டவை என்னென்ன? சிந்தித்துப்பாருங்கள்.
தூங்கச் செல்லும் முன் பல் தேய்ப்பது, வெளியில் செல்லும்போது ஷூ, ஸ்லிப்பரைத் துடைப்பது இப்படியான நல்ல பழக்கங்கள் முதல், புகை பிடித்தால்தான் இந்த நட்பு வட்டாரத்தில் நம்மை மதிப்பார்கள், மது அருந்துவது, பார்ட்டிக்குப் போவதுதான் நாகரிகம் என்பன போன்ற கெட்ட பழக்கங்கள் வரை எத்தனை விஷயங்களை நாம் மறுபரிசீலனை இன்றி வைத்துக்கொண்டிருக்கிறோம். சிலர், `வீட்டில் குழந்தைகள் அதிகமாக டி.வி பார்க்கின்றனர்’ எனப் புகார் சொல்வார்கள். உண்மையில், பெற்றோர் பார்ப்பதால்தான் குழந்தைகளுக்கும் டி.வி பார்க்கும் பழக்கம் வந்திருக்கும். நல்ல பழக்கங்களைக் கற்றுக்கொள்வதும், தீய பழக்கங்களை கைவிடுவதும் நமது முயற்சியில்தான் உள்ளன. அன்றாட வாழ்வில் பின்பற்ற வேண்டிய நல்ல பழக்கங்கள் என்னென்ன... கவனம் இல்லாமல், விழிப்புஉணர்வு இல்லாமல் செய்யும் தவறுகள், பழகிவிட்ட பழக்கங்களால் நமக்கு ஏற்படும் பாதிப்புகள் என்னென்ன...
நகங்களைக் கடிப்பது
1. சிலர் `எதையாவது யோசிக்கும்போது, டென்ஷனாக இருக்கும்போது, நகங்களைக் கடிக்கிறேன்’ என்று சொல்வார்கள். கிருமிகள் வாழ ஏற்ற இடங்களில் நகங்களும் ஒன்று. நகம் கடிப்பதால், அதில் உள்ள கிருமிகள் வாய் வழியே வயிற்றுக்குள் செல்லும். கல்லீரல் பாதிப்பு, வயிற்றில் தொற்று ஏற்படலாம்.
2. நகங்களின் அமைப்பில் மாற்றம் ஏற்படும். நகங்களின் வளர்ச்சியும் பாதிக்கப்படும். நகங்களைச் சுற்றி உள்ள இடங்களும் பாதிப்புக்குள்ளாகும். நகங்களின் நிறத்தில் மாறுதல் ஏற்படும்.
3. நகம் கடிப்பவர்கள், இந்த பழக்கத்திலிருந்து விடும்படும்வரை, தரமான நெய்ல் பாலீஷ் பூசலாம். (மற்றவர்கள் நெய்ல் பாலீஷ் போடுவதைத் தவிர்க்க வேண்டும்.)
1. சிலர் `எதையாவது யோசிக்கும்போது, டென்ஷனாக இருக்கும்போது, நகங்களைக் கடிக்கிறேன்’ என்று சொல்வார்கள். கிருமிகள் வாழ ஏற்ற இடங்களில் நகங்களும் ஒன்று. நகம் கடிப்பதால், அதில் உள்ள கிருமிகள் வாய் வழியே வயிற்றுக்குள் செல்லும். கல்லீரல் பாதிப்பு, வயிற்றில் தொற்று ஏற்படலாம்.
2. நகங்களின் அமைப்பில் மாற்றம் ஏற்படும். நகங்களின் வளர்ச்சியும் பாதிக்கப்படும். நகங்களைச் சுற்றி உள்ள இடங்களும் பாதிப்புக்குள்ளாகும். நகங்களின் நிறத்தில் மாறுதல் ஏற்படும்.
3. நகம் கடிப்பவர்கள், இந்த பழக்கத்திலிருந்து விடும்படும்வரை, தரமான நெய்ல் பாலீஷ் பூசலாம். (மற்றவர்கள் நெய்ல் பாலீஷ் போடுவதைத் தவிர்க்க வேண்டும்.)
கால் மேல் கால் போட்டு அமர்வது
4. கால் மேல் கால் போட்டு அமரும்போது, தற்காலிகமாக ரத்த அழுத்தம் அதிகமாகும். சில ஆய்வுகள் ‘இதயம் தொடர்பான பிரச்னைகள், இனப்பெருக்க மண்டலம் தொடர்பான பிரச்னைகள் வரலாம்’ என்று தெரிவிக்கின்றன. எனவே, கால் மேல் கால் போட்டு அமர்வதைத் தவிர்க்க வேண்டும்.
5. நீண்ட நேரம் உட்கார்ந்து வேலைசெய்யும் சூழலில் இருப்பவர்களுக்கு, உடல்பருமன் பிரச்னை, சர்க்கரை நோய் வர வாய்ப்புகள் அதிகம். இதனுடன், கால் மேல் கால் போட்டு அமரும்போது, ரத்த அழுத்தம் அதிகமாகி, இதயம் தொடர்பான பிரச்னைகள் வரலாம்.
4. கால் மேல் கால் போட்டு அமரும்போது, தற்காலிகமாக ரத்த அழுத்தம் அதிகமாகும். சில ஆய்வுகள் ‘இதயம் தொடர்பான பிரச்னைகள், இனப்பெருக்க மண்டலம் தொடர்பான பிரச்னைகள் வரலாம்’ என்று தெரிவிக்கின்றன. எனவே, கால் மேல் கால் போட்டு அமர்வதைத் தவிர்க்க வேண்டும்.
5. நீண்ட நேரம் உட்கார்ந்து வேலைசெய்யும் சூழலில் இருப்பவர்களுக்கு, உடல்பருமன் பிரச்னை, சர்க்கரை நோய் வர வாய்ப்புகள் அதிகம். இதனுடன், கால் மேல் கால் போட்டு அமரும்போது, ரத்த அழுத்தம் அதிகமாகி, இதயம் தொடர்பான பிரச்னைகள் வரலாம்.
நீண்ட நேரம் உட்கார்ந்து வேலை செய்வதைத் தவிர்க்கலாம். அரை மணி நேரத்துக்கு ஒருமுறை இரண்டு நிமிடங்கள் எழுந்து நடக்கலாம்.
நெட்டி முறிப்பது
6.டென்ஷனாக இருக்கும்போது பதற்றத்தில் கைவிரல்களை மடக்கி, நெட்டி முறிப்பது பலரின் வழக்கம். கைவிரல்களின் இணைப்புகளில் திரவம் இருக்கும். நெட்டி முறிக்கும்போது, விரல் மூட்டு மற்றும் திரவம் பாதிக்கப்படும். தொடர்ந்து செய்துவரும்போது, மூட்டுப் பிரச்னைகள்கூட வரலாம். டென்ஷனான தருணங்களில் ஒரு கிளாஸ் தண்ணீர் குடிக்கலாம்.
6.டென்ஷனாக இருக்கும்போது பதற்றத்தில் கைவிரல்களை மடக்கி, நெட்டி முறிப்பது பலரின் வழக்கம். கைவிரல்களின் இணைப்புகளில் திரவம் இருக்கும். நெட்டி முறிக்கும்போது, விரல் மூட்டு மற்றும் திரவம் பாதிக்கப்படும். தொடர்ந்து செய்துவரும்போது, மூட்டுப் பிரச்னைகள்கூட வரலாம். டென்ஷனான தருணங்களில் ஒரு கிளாஸ் தண்ணீர் குடிக்கலாம்.
7. இரவில், விளக்குகளை அணைத்துவிட்டு செல்போன் பயன்படுத்தும்போது, அதில் இருந்து வெளிப்படும் ஒளிக்கற்றைகள் கண்களைப் பாதிக்கலாம். மேலும், இது தூக்கத்தையும் கெடுக்கும்.
தூக்கம் பாதிக்கப்படுவதால், தூங்கும் நேரமும் பாதிக்கப்படும். மெலடோனின் என்ற ஹார்மோன் சுரப்பது, தூக்கத்தில்தான். சரியாகத் தூங்காமல் இருந்தால், இந்த ஹார்மோன் சுரக்காமல்போகலாம். இந்த ஹார்மோன் சுரப்புப் பிரச்னை தினமும் இருந்தால், மார்பகம், ப்ராஸ்டேட், பெருங்குடல், மலக்குடல் புற்றுநோய்கள் வரலாம்.
8. காலையில் எழ அலாரம் செட் செய்த பிறகு, மீண்டும் செல்போனைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும்.
9. தூங்கச் செல்வதற்கு ஒரு மணி நேரத்துக்கு முன் எலெக்ட்ரானிக்ஸ் கருவிகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும்.
தூக்கம் பாதிக்கப்படுவதால், தூங்கும் நேரமும் பாதிக்கப்படும். மெலடோனின் என்ற ஹார்மோன் சுரப்பது, தூக்கத்தில்தான். சரியாகத் தூங்காமல் இருந்தால், இந்த ஹார்மோன் சுரக்காமல்போகலாம். இந்த ஹார்மோன் சுரப்புப் பிரச்னை தினமும் இருந்தால், மார்பகம், ப்ராஸ்டேட், பெருங்குடல், மலக்குடல் புற்றுநோய்கள் வரலாம்.
8. காலையில் எழ அலாரம் செட் செய்த பிறகு, மீண்டும் செல்போனைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும்.
9. தூங்கச் செல்வதற்கு ஒரு மணி நேரத்துக்கு முன் எலெக்ட்ரானிக்ஸ் கருவிகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும்.
ஃபுல் வாலட்
10. ஆண்களுக்கு, பர்ஸை எப்போதும் பின்பக்கம் வைக்கும் பழக்கம் இருக்கும். பெரும்பாலானோர், பர்ஸை ஏதோ பேப்பர் மூட்டைபோல வைத்திருப்பர். அதில் பணத்தைவிட கார்டுகளும் பில்களுமே அதிகமாக இருக்கும். தடிமனான பர்ஸை பின் பாக்கெட்டில் வைத்தபடி, மணிக்கணக்கில் அமர்ந்திருப்பார்கள். இப்படி அமரும்போது, உடலின் அமைப்பு (பாஸ்ச்சர்) பாதிக்கப்படும். அதாவது, ஒரு பக்கம் மட்டும் சில செ.மீ உயர்த்தப்பட்டிருக்கும். இப்படிக் கோணலாக அமர்வதால், முதுகெலும்புப் பகுதி பாதிக்கப்படும். கழுத்து, முதுகெலும்பு, இடுப்பு, தோள்பட்டையில் வலி ஏற்படும். இந்தப் பழக்கத்தை வருடக்கணக்கில் செய்தால், உங்கள் முதுகெலும்பு தீவிரமாகப் பாதிக்கப்படும்.
10. ஆண்களுக்கு, பர்ஸை எப்போதும் பின்பக்கம் வைக்கும் பழக்கம் இருக்கும். பெரும்பாலானோர், பர்ஸை ஏதோ பேப்பர் மூட்டைபோல வைத்திருப்பர். அதில் பணத்தைவிட கார்டுகளும் பில்களுமே அதிகமாக இருக்கும். தடிமனான பர்ஸை பின் பாக்கெட்டில் வைத்தபடி, மணிக்கணக்கில் அமர்ந்திருப்பார்கள். இப்படி அமரும்போது, உடலின் அமைப்பு (பாஸ்ச்சர்) பாதிக்கப்படும். அதாவது, ஒரு பக்கம் மட்டும் சில செ.மீ உயர்த்தப்பட்டிருக்கும். இப்படிக் கோணலாக அமர்வதால், முதுகெலும்புப் பகுதி பாதிக்கப்படும். கழுத்து, முதுகெலும்பு, இடுப்பு, தோள்பட்டையில் வலி ஏற்படும். இந்தப் பழக்கத்தை வருடக்கணக்கில் செய்தால், உங்கள் முதுகெலும்பு தீவிரமாகப் பாதிக்கப்படும்.
11. அமரும்போது, பின்புற பாக்கெட்டில் இருக்கும் சீப்பு, வாலட், கார்டு போன்றவற்றை டேபிள் மேல் வைத்துவிட்டு அமரலாம்.
ஸ்கின்னி ஜீன்ஸ்
12. பருவகாலத்துக்கு ஏற்ற உணவும் உடையும்தான் உடலுக்கு நல்லது. தமிழ்நாடு வெப்ப மண்டல பூமி. இங்கு, குளிர்காலம் மூன்று மாதங்கள் மட்டுமே. அப்போது தடிமனான ஆடைகளை அணியலாம். ஆனால், இறுக்கமான ஆடைகளை அணியக் கூடாது. ஸ்கின்னி ஜீன்ஸ், பார்க்க அழகாக இருக்கும்; சிலருக்குக் கச்சிதமான தோற்றத்தைத் தரும். ஆனால், நீண்ட நேரம் இதை அணிந்துகொண்டிருப்பதால், இனப்பெருக்க உறுப்புகள் பாதிக்கப்படும்.
12. பருவகாலத்துக்கு ஏற்ற உணவும் உடையும்தான் உடலுக்கு நல்லது. தமிழ்நாடு வெப்ப மண்டல பூமி. இங்கு, குளிர்காலம் மூன்று மாதங்கள் மட்டுமே. அப்போது தடிமனான ஆடைகளை அணியலாம். ஆனால், இறுக்கமான ஆடைகளை அணியக் கூடாது. ஸ்கின்னி ஜீன்ஸ், பார்க்க அழகாக இருக்கும்; சிலருக்குக் கச்சிதமான தோற்றத்தைத் தரும். ஆனால், நீண்ட நேரம் இதை அணிந்துகொண்டிருப்பதால், இனப்பெருக்க உறுப்புகள் பாதிக்கப்படும்.
13. உடலின் வியர்வையை உறிஞ்சும் தன்மைகொண்ட பருத்தி ஆடைகளை அணிவதுதான் சரி. உடலின் வியர்வையை அப்படியே தேக்கிவைத்து, காற்றுப் போகாமல் தடுக்கும் ஆடைகள் உடலின் கிருமிகளை அதிகமாக உருவாக்கும். அரிப்பு, சொறி போன்ற சருமப் பிரச்னைகள் வரலாம்.
அதிகப்படியான உடல்சூடு ஏற்பட்டு, சின்னச்சின்ன கட்டிகளும் உருவாகும். தொடைகளில் உள்ள நரம்புகளில் அழுத்தம் ஏற்பட்டு, ரத்த ஓட்டம் பாதிக்கப்படும். எரிச்சல், வியர்வை, துர்நாற்றம், பிசுபிசுப்பு போன்ற அசெளகர்ய உணர்வுகளும் ஏற்படும். பெண்களுக்கு, வெள்ளைப்படுதல் பிரச்னை உண்டாகும்.
14. அக்குள் மற்றும் இனப்பெருக்க உறுப்புகள் உள்ள பகுதிகளுக்கு, காற்றோட்டமான உடையை அணிவதே சிறந்தது. அதுவும், பருத்தித் துணியால் தயாரிக்கப்பட்ட உடைகளே சிறந்தவை.
அதிகப்படியான உடல்சூடு ஏற்பட்டு, சின்னச்சின்ன கட்டிகளும் உருவாகும். தொடைகளில் உள்ள நரம்புகளில் அழுத்தம் ஏற்பட்டு, ரத்த ஓட்டம் பாதிக்கப்படும். எரிச்சல், வியர்வை, துர்நாற்றம், பிசுபிசுப்பு போன்ற அசெளகர்ய உணர்வுகளும் ஏற்படும். பெண்களுக்கு, வெள்ளைப்படுதல் பிரச்னை உண்டாகும்.
14. அக்குள் மற்றும் இனப்பெருக்க உறுப்புகள் உள்ள பகுதிகளுக்கு, காற்றோட்டமான உடையை அணிவதே சிறந்தது. அதுவும், பருத்தித் துணியால் தயாரிக்கப்பட்ட உடைகளே சிறந்தவை.
கிரிப்பர் இல்லாத செருப்புகள்
15. தற்போது, கலர் கலராக பலவித செருப்புகள் குறைந்தவிலைக்குக் கிடைக்கின்றன. அவற்றில், சிலவகை செருப்புகளின் அடியில் மட்டுமே கிரிப்பர் டிஸைன்கள் இருக்கும். இவை, எந்தச் சூழலிலும் வழுக்காமல் இருக்கும்.
16. சில வகை செருப்புகளின் அடியில் கிரிப்பர் இல்லாமல் இருக்கும். பெரும்பாலும், இவற்றை வீட்டில் டாய்லெட் செருப்பாகப் பயன்படுத்துவர். கிரிப் இல்லாததால், சில சமயங்களில் இவை வழுக்கிவிட வாய்ப்பு உள்ளது. அவசர நேரங்களில் வேகமாக நடக்கும்போது, வழுக்கிவிட்டு கை, கால், தலையில் அடிபட நேரலாம்.
17. டாய்லெட் செருப்பு, வீட்டில் மட்டும் பயன்படுத்தும் செருப்பு, தோட்டத்தில் மட்டும் பயன்படுத்தும் செருப்பு என எந்தச் செருப்பாக இருந்தாலும், கிரிப்பர் இருந்தால் மட்டுமே பயன்படுத்துவது பாதுகாப்பானது.
15. தற்போது, கலர் கலராக பலவித செருப்புகள் குறைந்தவிலைக்குக் கிடைக்கின்றன. அவற்றில், சிலவகை செருப்புகளின் அடியில் மட்டுமே கிரிப்பர் டிஸைன்கள் இருக்கும். இவை, எந்தச் சூழலிலும் வழுக்காமல் இருக்கும்.
16. சில வகை செருப்புகளின் அடியில் கிரிப்பர் இல்லாமல் இருக்கும். பெரும்பாலும், இவற்றை வீட்டில் டாய்லெட் செருப்பாகப் பயன்படுத்துவர். கிரிப் இல்லாததால், சில சமயங்களில் இவை வழுக்கிவிட வாய்ப்பு உள்ளது. அவசர நேரங்களில் வேகமாக நடக்கும்போது, வழுக்கிவிட்டு கை, கால், தலையில் அடிபட நேரலாம்.
17. டாய்லெட் செருப்பு, வீட்டில் மட்டும் பயன்படுத்தும் செருப்பு, தோட்டத்தில் மட்டும் பயன்படுத்தும் செருப்பு என எந்தச் செருப்பாக இருந்தாலும், கிரிப்பர் இருந்தால் மட்டுமே பயன்படுத்துவது பாதுகாப்பானது.
எமோஷனல் ஈட்டிங்
18.ஸ்ட்ரெஸ், பதற்றமான உணர்வுகள் தோன்றும்போது தன்னை அறியாமல் அதிகம் சாப்பிட நேரிடும். டென்ஷன், கவலை, சோர்வான தருணங்களில் உணவின் அளவைக் கவனிப்பது நல்லது.
19. சிலர், அதிக டென்ஷன் எனச் சொல்லி, காபி குடிக்கச் செல்வார்கள். டென்ஷன் நாட்களில் 10 காபி, டீ குடிப்பவர்களும் உள்ளனர். இதைத் தவிர்த்து, பழங்கள், பழச்சாறுகளைச் சாப்பிடலாம்.
18.ஸ்ட்ரெஸ், பதற்றமான உணர்வுகள் தோன்றும்போது தன்னை அறியாமல் அதிகம் சாப்பிட நேரிடும். டென்ஷன், கவலை, சோர்வான தருணங்களில் உணவின் அளவைக் கவனிப்பது நல்லது.
19. சிலர், அதிக டென்ஷன் எனச் சொல்லி, காபி குடிக்கச் செல்வார்கள். டென்ஷன் நாட்களில் 10 காபி, டீ குடிப்பவர்களும் உள்ளனர். இதைத் தவிர்த்து, பழங்கள், பழச்சாறுகளைச் சாப்பிடலாம்.
வலி நிவாரணிகள்
20. தலைவலி, உடல்வலி என்றால், உடனே மருந்துக் கடைக்குச் சென்று வலி நிவாரணி மாத்திரை வாங்கிப் போடும் பழக்கம் பலருக்கும் உள்ளது. இதனால், தற்காலிக நிவாரணம் கிடைத்தாலும், இதன் பின்விளைவுகள் மோசமாக இருக்கலாம் என்பதால், இதைத் தவிர்க்க வேண்டும்.
20. தலைவலி, உடல்வலி என்றால், உடனே மருந்துக் கடைக்குச் சென்று வலி நிவாரணி மாத்திரை வாங்கிப் போடும் பழக்கம் பலருக்கும் உள்ளது. இதனால், தற்காலிக நிவாரணம் கிடைத்தாலும், இதன் பின்விளைவுகள் மோசமாக இருக்கலாம் என்பதால், இதைத் தவிர்க்க வேண்டும்.
21. வலி என்பது நம் உடல் பிரச்னைக்கான அறிகுறியாகவோ, நம்முடைய சில தவறான பழக்கங்களால் ஏற்பட்ட பாதிப்பாகவோ இருக்கலாம். எதனால் அந்தப் பிரச்னை ஏற்பட்டது எனக் கண்டறிந்து, அதை சரிசெய்ய முயற்சிக்க வேண்டும். அப்போதைக்கு தீர்வு கிடைத்தால்போதும் என, பெயின் கில்லரைச் சாப்பிடக் கூடாது. சுய மருத்துவம் செய்துகொண்டால், நாளடைவில் சிறுநீரகம், கல்லீரல் பாதிக்கப்படக்கூடும்.
22. தொடர் தலைவலி, வயிற்று வலி, முடி கொட்டுதல், அலர்ஜி ஏற்படுதல் போன்ற பிரச்னைகள் வந்தால், மருத்துவரை அணுகி, காரணத்தைக் கண்டறிந்து சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும்.
22. தொடர் தலைவலி, வயிற்று வலி, முடி கொட்டுதல், அலர்ஜி ஏற்படுதல் போன்ற பிரச்னைகள் வந்தால், மருத்துவரை அணுகி, காரணத்தைக் கண்டறிந்து சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும்.
இரவும் நொறுக்குத்தீனியும்
23. மாலை வரைதான் நொறுக்குத்தீனி சாப்பிட வேண்டும். இரவில் நொறுக்குத்தீனியைச் சாப்பிட்டால், செரிக்கத் தாமதமாகி, உடலின் உயிர் கடிகார சுழற்சி மாறுபடும். இதனால், நெஞ்சு எரிச்சல், ஏப்பம், செரிமானக் கோளாறு, மலச்சிக்கல் ஏற்படலாம்.
உணவைச் செரிக்கச் சுரக்கும் அமிலம், நொறுக்குத்தீனி சாப்பிட்ட பிறகு சுரக்கத் தொடங்கும். தூங்கும் நேரத்தில் உடல் செய்ய வேண்டிய வேலை பாதிக்கப்பட்டு, செரிப்பதற்கான வேலை உடலில் நடக்கும். எனவே, இரவு உணவை 9 மணிக்குள் முடித்துவிட வேண்டும். அதன் பிறகு, நொறுக்குத்தீனிகளைத் தொடுவதைத் தவிர்க்க வேண்டும்.
23. மாலை வரைதான் நொறுக்குத்தீனி சாப்பிட வேண்டும். இரவில் நொறுக்குத்தீனியைச் சாப்பிட்டால், செரிக்கத் தாமதமாகி, உடலின் உயிர் கடிகார சுழற்சி மாறுபடும். இதனால், நெஞ்சு எரிச்சல், ஏப்பம், செரிமானக் கோளாறு, மலச்சிக்கல் ஏற்படலாம்.
உணவைச் செரிக்கச் சுரக்கும் அமிலம், நொறுக்குத்தீனி சாப்பிட்ட பிறகு சுரக்கத் தொடங்கும். தூங்கும் நேரத்தில் உடல் செய்ய வேண்டிய வேலை பாதிக்கப்பட்டு, செரிப்பதற்கான வேலை உடலில் நடக்கும். எனவே, இரவு உணவை 9 மணிக்குள் முடித்துவிட வேண்டும். அதன் பிறகு, நொறுக்குத்தீனிகளைத் தொடுவதைத் தவிர்க்க வேண்டும்.
புகைப்பழக்கம்
24. புகைப்பது உடலுக்குக் கேடு. ஒருவர் புகைத்துவிட்ட, புகையை மற்றவர்கள் சுவாசிக்கும்போது (பேசிவ் ஸ்மோக்கர்ஸ்) அவர்களுக்கும் அந்தப் பாதிப்பு ஏற்படும். எனவே, புகைப்பவரின் அருகில் நிற்பதுகூட கெடுதல்தான். குழந்தைகள், கர்ப்பிணிகளுக்கு பாதிப்பு இன்னும் அதிகமாக இருக்கும்.
24. புகைப்பது உடலுக்குக் கேடு. ஒருவர் புகைத்துவிட்ட, புகையை மற்றவர்கள் சுவாசிக்கும்போது (பேசிவ் ஸ்மோக்கர்ஸ்) அவர்களுக்கும் அந்தப் பாதிப்பு ஏற்படும். எனவே, புகைப்பவரின் அருகில் நிற்பதுகூட கெடுதல்தான். குழந்தைகள், கர்ப்பிணிகளுக்கு பாதிப்பு இன்னும் அதிகமாக இருக்கும்.
புகைப்பவர்களுக்கும், பேசிவ் ஸ்மோக்கர்ஸ்களுக்கும் நுரையீரல் புற்றுநோய், மாரடைப்பு, நெஞ்சுச்சளி, வாய் மற்றும் தொண்டைப் புற்றுநோய், சிறுநீரகப் பாதிப்புகள் ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகரிக்கிறது.
25. புகைப்பதை நிறுத்துங்கள். நண்பர் புகைபிடிக்கும்போது, அந்த இடத்தில் நிற்பதைத் தவிர்த்திடுங்கள். புகைக்கும் எண்ணம் வரும்போது, பழச்சாறு குடிப்பது, ஸ்வீட் லெஸ் சூயிங்்கம் மெல்வது எனக் கவனத்தைத் திசைதிருப்புங்கள்.
26. கவனத்தை திசைதிருப்ப முடியவில்லை, மீண்டும் மீண்டும் சிகரெட் பிடிக்கத் தூண்டுகிறது என்றால், தகுந்த மருத்துவரை அணுகி, சிகிச்சை எடுத்துக்கொள்வது நல்லது.
27. குடிப்பழக்கம் என்று சொல்வதே தவறு. குடி ஒரு பழக்கம் அல்ல நோய். `நான் சோஷியல் டிரிங்க்கர். எப்போதாவதுதான் சாப்பிடுவேன். பீர் மட்டும்தான் குடிப்பேன்’ இப்படி, பல்வேறு காரணங்களைச் சொல்லி, தன்னைத்தானே ஏமாற்றிக்கொள்வார்கள். ஒருமுறை குடித்தாலும், குடி என்பது தீமையானது என்பதே மருத்துவம் சொல்லும் உண்மை.
28. பீர் மட்டும் சாப்பிடுபவர்களுக்கு, யூரிக் ஆசிட் அதிகரித்து கவுட் பிரச்னை ஏற்படும். கால் கட்டைவிரலில் வீக்கம் ஏற்பட்டு, நடக்க முடியாமல்போகலாம். அதிகமாகக் குடிப்பவர்களின் கல்லீரல் பாதிப்பது உறுதி.
29. குடியை முற்றிலுமாகக் கைவிடுவதுதான் ஒரே தீர்வு. குடிப்பழக்கம் உள்ள நண்பர்களைச் சந்திக்காது இருப்பது, நேரத்துக்கு உணவு உண்பது நல்லது. தேவைப்பட்டால், மது மறுவாழ்வு கவுன்சலிங் பெற்றுக்கொள்ளலாம்.
25. புகைப்பதை நிறுத்துங்கள். நண்பர் புகைபிடிக்கும்போது, அந்த இடத்தில் நிற்பதைத் தவிர்த்திடுங்கள். புகைக்கும் எண்ணம் வரும்போது, பழச்சாறு குடிப்பது, ஸ்வீட் லெஸ் சூயிங்்கம் மெல்வது எனக் கவனத்தைத் திசைதிருப்புங்கள்.
26. கவனத்தை திசைதிருப்ப முடியவில்லை, மீண்டும் மீண்டும் சிகரெட் பிடிக்கத் தூண்டுகிறது என்றால், தகுந்த மருத்துவரை அணுகி, சிகிச்சை எடுத்துக்கொள்வது நல்லது.
27. குடிப்பழக்கம் என்று சொல்வதே தவறு. குடி ஒரு பழக்கம் அல்ல நோய். `நான் சோஷியல் டிரிங்க்கர். எப்போதாவதுதான் சாப்பிடுவேன். பீர் மட்டும்தான் குடிப்பேன்’ இப்படி, பல்வேறு காரணங்களைச் சொல்லி, தன்னைத்தானே ஏமாற்றிக்கொள்வார்கள். ஒருமுறை குடித்தாலும், குடி என்பது தீமையானது என்பதே மருத்துவம் சொல்லும் உண்மை.
28. பீர் மட்டும் சாப்பிடுபவர்களுக்கு, யூரிக் ஆசிட் அதிகரித்து கவுட் பிரச்னை ஏற்படும். கால் கட்டைவிரலில் வீக்கம் ஏற்பட்டு, நடக்க முடியாமல்போகலாம். அதிகமாகக் குடிப்பவர்களின் கல்லீரல் பாதிப்பது உறுதி.
29. குடியை முற்றிலுமாகக் கைவிடுவதுதான் ஒரே தீர்வு. குடிப்பழக்கம் உள்ள நண்பர்களைச் சந்திக்காது இருப்பது, நேரத்துக்கு உணவு உண்பது நல்லது. தேவைப்பட்டால், மது மறுவாழ்வு கவுன்சலிங் பெற்றுக்கொள்ளலாம்.
No comments:
Post a Comment