30. பொருட்களை வாங்கும்போது, அதன் உற்பத்தித் தேதி, காலாவதியாகும் தேதிகளைப் பார்த்து வாங்க வேண்டியது மிகவும் அவசியம். காலாவதித் தேதிக்குப் பிறகு பயன்படுத்தும்போது, அதனால் பல்வேறு உடல்நலக் குறைபாடுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
31. சிலர், எந்தப் பொருளை எடுத்தாலும் பெரிதாகத் தேர்ந்தெடுப்பார்கள். பவுடர், ஷாம்பு, காஸ்மெட்டிக் பொருட்கள் போன்றவை எல்லாமே பெரிய அளவில் இருக்கும். `இரண்டு மூன்று மாதங்களுக்குப் பிரச்னை இல்லாமல் இருக்குமே’ என்று காரணம் சொல்வார்கள்.
நாளடைவில், அவற்றின் லேபிள் கிழிந்துபோகும். இதனால், காலாவதித் தேதி தெரியாமல்போகும். இதை அறியாமல், வருடக்கணக்கில் பவுடரைப் பூசுவதால் சரும அலர்ஜிகள் வரலாம்.
32. எந்தப் பொருளை வாங்கினாலும் காலாவதித் தேதியைக் கவனித்து வாங்குங்கள். காஸ்மெட்டிக் பொருட்களின் காலாவதித் தேதியைக் குறித்துக்கொள்ளுங்கள். காலாவதித் தேதி நெருங்கும் இரு மாதங்களுக்கு முன்னரே, அவற்றைப் பயன்படுத்துவதைத் தவிர்த்துவிடுவது நல்லது.
குளியல்
33.ஒரு நாளைக்கு இரண்டு முறை குளிப்பது நல்லது. குறிப்பாக, கோடை காலத்தில், காலை, மாலை இருவேளையும் குளிக்க வேண்டியது அவசியம்.
34. சிலர், `கொதிக்கக் கொதிக்க வெந்நீரில் குளித்தால்தான் உடல் அலுப்புப்போகும்’ என நினைப்பார்கள். இது தவறு. இளஞ்சூடான நீரில் குளிப்பதே நல்லது. வெயில் காலத்தில் சாதாரண நீரில் குளித்தாலே உடல் வெப்பம் குறைந்துவிடும்.
35. அதிக வெப்பநிலையில் உள்ள வெந்நீரில் குளிப்பதால், சரும செல்கள் பாதிக்கப்பட்டு சருமத்தில் சுருக்கங்கள் ஏற்படும்.
32. எந்தப் பொருளை வாங்கினாலும் காலாவதித் தேதியைக் கவனித்து வாங்குங்கள். காஸ்மெட்டிக் பொருட்களின் காலாவதித் தேதியைக் குறித்துக்கொள்ளுங்கள். காலாவதித் தேதி நெருங்கும் இரு மாதங்களுக்கு முன்னரே, அவற்றைப் பயன்படுத்துவதைத் தவிர்த்துவிடுவது நல்லது.
குளியல்
33.ஒரு நாளைக்கு இரண்டு முறை குளிப்பது நல்லது. குறிப்பாக, கோடை காலத்தில், காலை, மாலை இருவேளையும் குளிக்க வேண்டியது அவசியம்.
34. சிலர், `கொதிக்கக் கொதிக்க வெந்நீரில் குளித்தால்தான் உடல் அலுப்புப்போகும்’ என நினைப்பார்கள். இது தவறு. இளஞ்சூடான நீரில் குளிப்பதே நல்லது. வெயில் காலத்தில் சாதாரண நீரில் குளித்தாலே உடல் வெப்பம் குறைந்துவிடும்.
35. அதிக வெப்பநிலையில் உள்ள வெந்நீரில் குளிப்பதால், சரும செல்கள் பாதிக்கப்பட்டு சருமத்தில் சுருக்கங்கள் ஏற்படும்.
புறம்பேசுவது
36. மற்றவர்களைப் பற்றி குறை சொல்வதோ, விமர்சிப்பதோ நல்லது இல்லை. இது மனநலனைப் பாதிக்கக்கூடிய விஷயம். ஒருவரின் குணத்தையே அசைத்துப்பார்க்கும் பழக்கம். இதனால் மற்றவர்கள் நம்மைத் தாழ்வாக மதிப்பிடவும் வாய்ப்பு உண்டு. சமூக உறவு, மன அமைதி கெட்டு, மன அழுத்தம் அதிகரிக்கும்.
வாய்ப் பராமரிப்பு
37. காலையிலிருந்து எவ்வளவு உணவுகளை உண்டு ருசித்திருப்போம். தேவைப்படும்போது எல்லாம் நொறுக்குத்தீனி, காபி, டீ, ஜூஸ் எனப் பல்வேறு உணவுகளைச் சாப்பிட்டிருப்போம். இரவு தூங்கச் செல்வதற்கு முன்னர், இந்த உணவுத்துகள்கள் பற்களில் மாட்டி இருக்கலாம். இந்த உணவுத் துகள்கள்தான், பாக்டீரியா வளர ஏற்ற இடம். இதனால், பல் சொத்தை உள்பட பல பிரச்னைகள் ஏற்படலாம். இதைத் தவிர்க்க, தினமும் இரண்டு வேளை பல் துலக்க வேண்டும்.
38. வாய் துர்நாற்றத்தைப் போக்க, மவுத்வாஷ் பயன்படுத்துவதும் தவறு. பற்கூச்சம், ஈறு பிரச்னை எனப் பல காரணங்களுக்காக மவுத்வாஷ் பரிந்துரைக்கப்படுகிறது. எனவே, டாக்டர் பரிந்துரைத்தால் மட்டுமே மவுத்வாஷ் பயன்படுத்த வேண்டும்.
39. பலரும் மாதக்கணக்கில் ஒரே பிரஷ்ஷைப் பயன்படுத்துவார்கள். அது வளைந்து, நெளித்து பல் இடுக்குகளில் உள்ள உணவுத்துகள்களை அப்புறப்படுத்த முடியாத நிலையில் இருக்கும். எனவே, குறிப்பிட்ட கால இடைவெளியில் பிரஷ்ஷை மாற்ற வேண்டும்.
36. மற்றவர்களைப் பற்றி குறை சொல்வதோ, விமர்சிப்பதோ நல்லது இல்லை. இது மனநலனைப் பாதிக்கக்கூடிய விஷயம். ஒருவரின் குணத்தையே அசைத்துப்பார்க்கும் பழக்கம். இதனால் மற்றவர்கள் நம்மைத் தாழ்வாக மதிப்பிடவும் வாய்ப்பு உண்டு. சமூக உறவு, மன அமைதி கெட்டு, மன அழுத்தம் அதிகரிக்கும்.
வாய்ப் பராமரிப்பு
37. காலையிலிருந்து எவ்வளவு உணவுகளை உண்டு ருசித்திருப்போம். தேவைப்படும்போது எல்லாம் நொறுக்குத்தீனி, காபி, டீ, ஜூஸ் எனப் பல்வேறு உணவுகளைச் சாப்பிட்டிருப்போம். இரவு தூங்கச் செல்வதற்கு முன்னர், இந்த உணவுத்துகள்கள் பற்களில் மாட்டி இருக்கலாம். இந்த உணவுத் துகள்கள்தான், பாக்டீரியா வளர ஏற்ற இடம். இதனால், பல் சொத்தை உள்பட பல பிரச்னைகள் ஏற்படலாம். இதைத் தவிர்க்க, தினமும் இரண்டு வேளை பல் துலக்க வேண்டும்.
38. வாய் துர்நாற்றத்தைப் போக்க, மவுத்வாஷ் பயன்படுத்துவதும் தவறு. பற்கூச்சம், ஈறு பிரச்னை எனப் பல காரணங்களுக்காக மவுத்வாஷ் பரிந்துரைக்கப்படுகிறது. எனவே, டாக்டர் பரிந்துரைத்தால் மட்டுமே மவுத்வாஷ் பயன்படுத்த வேண்டும்.
39. பலரும் மாதக்கணக்கில் ஒரே பிரஷ்ஷைப் பயன்படுத்துவார்கள். அது வளைந்து, நெளித்து பல் இடுக்குகளில் உள்ள உணவுத்துகள்களை அப்புறப்படுத்த முடியாத நிலையில் இருக்கும். எனவே, குறிப்பிட்ட கால இடைவெளியில் பிரஷ்ஷை மாற்ற வேண்டும்.
40. கடினமானதாக இல்லாமல், ஓரளவுக்கு மென்மையான பிரஷ் பயன்படுத்துவது நல்லது. குழந்தைகளுக்குக் கற்றுக்கொடுக்க வேண்டிய நல்ல பழக்கங்கள்!
குழந்தை வளர்ப்பு என்பது ஒரு கலை மட்டும் அல்ல. ஒரு குழந்தையின், ஒரு சமூகத்தின் எதிர்காலத்தையே தீர்மானிக்கும் செயல். குழந்தைகளுக்காகச் சேமித்துவைக்கப்படும் பொருளாதாரத்தைவிட, அவர்களுக்குச் சொல்லித்தரும் நற்பழக்கங்களினால், குழந்தையின் மன வளர்ச்சி செழுமையாக இருக்கும். சிறு வயதில் கற்றுக்கொள்ளும் பழக்கங்கள், அவர்களின் வாழ்க்கை முழுவதற்கும் உதவும். வாழ்வாதாரச் சிக்கல்களைச் சிரமம் இன்றி எதிர்கொள்ள உதவும்.
குழந்தை வளர்ப்பு என்பது ஒரு கலை மட்டும் அல்ல. ஒரு குழந்தையின், ஒரு சமூகத்தின் எதிர்காலத்தையே தீர்மானிக்கும் செயல். குழந்தைகளுக்காகச் சேமித்துவைக்கப்படும் பொருளாதாரத்தைவிட, அவர்களுக்குச் சொல்லித்தரும் நற்பழக்கங்களினால், குழந்தையின் மன வளர்ச்சி செழுமையாக இருக்கும். சிறு வயதில் கற்றுக்கொள்ளும் பழக்கங்கள், அவர்களின் வாழ்க்கை முழுவதற்கும் உதவும். வாழ்வாதாரச் சிக்கல்களைச் சிரமம் இன்றி எதிர்கொள்ள உதவும்.
நல்ல ரோல்மாடல் நீங்கள்தான்!
41. நூறு சதவிகிதம் பர்ஃபெக்டாக யாராலும் இருக்க முடியாது. ஆனால், குழந்தைக்கு முன் நல்ல ரோல்மாடலாக இருப்பது அவர்களின் மன வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும். ‘ஐயோ! இன்னிக்குக் கீரையா? எனக்கு வேண்டாம்’ எனச் சொல்வதற்கு முன், அருகில் குழந்தை இருப்பதைக் கவனியுங்கள். `அப்பாவுக்கோ அம்மாவுக்கோ கீரை பிடிக்கவில்லை. நாம் மட்டும் ஏன் சாப்பிட வேண்டும்?’ என்ற எண்ணம் தோன்ற, நாமே காரணமாக இருக்கக் கூடாது.
41. நூறு சதவிகிதம் பர்ஃபெக்டாக யாராலும் இருக்க முடியாது. ஆனால், குழந்தைக்கு முன் நல்ல ரோல்மாடலாக இருப்பது அவர்களின் மன வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும். ‘ஐயோ! இன்னிக்குக் கீரையா? எனக்கு வேண்டாம்’ எனச் சொல்வதற்கு முன், அருகில் குழந்தை இருப்பதைக் கவனியுங்கள். `அப்பாவுக்கோ அம்மாவுக்கோ கீரை பிடிக்கவில்லை. நாம் மட்டும் ஏன் சாப்பிட வேண்டும்?’ என்ற எண்ணம் தோன்ற, நாமே காரணமாக இருக்கக் கூடாது.
குழந்தையின் முன்னிலையில் விருந்தோம்பல்
42. வீட்டில் உறவினர்கள் வந்து சென்ற பிறகு, அவர்களைப் பற்றி குறை பேசுவதைக் குழந்தைகள் கவனித்தால், அவரின் மேல் மதிப்பு இல்லாமல்போகலாம். மேலும், விருந்தாளியை வரவேற்று உபசரித்து, முகத்துக்கு நேரே மரியாதை தந்துவிட்டு, சென்ற பின் அவரைப் பற்றி இழிவாகப் பேசும் பழக்கத்தைப் பார்க்கும் குழந்தையும், இதே பழக்கத்தைக் கற்றுக்கொள்ளும்.
இந்தக் குணம் அவர்களின் மனதில் பதிந்தால், நல்ல அப்பா, அம்மா என்பது நீங்களாக இல்லாமல்போகலாம். குழந்தைகள் முன் எதைச் செய்தாலும் அவற்றைக் கவனித்துச்செய்ய வேண்டிய பொறுப்பு உங்களிடம் இருக்கிறது என்பதை நினைவில்கொள்ளுங்கள்.
42. வீட்டில் உறவினர்கள் வந்து சென்ற பிறகு, அவர்களைப் பற்றி குறை பேசுவதைக் குழந்தைகள் கவனித்தால், அவரின் மேல் மதிப்பு இல்லாமல்போகலாம். மேலும், விருந்தாளியை வரவேற்று உபசரித்து, முகத்துக்கு நேரே மரியாதை தந்துவிட்டு, சென்ற பின் அவரைப் பற்றி இழிவாகப் பேசும் பழக்கத்தைப் பார்க்கும் குழந்தையும், இதே பழக்கத்தைக் கற்றுக்கொள்ளும்.
இந்தக் குணம் அவர்களின் மனதில் பதிந்தால், நல்ல அப்பா, அம்மா என்பது நீங்களாக இல்லாமல்போகலாம். குழந்தைகள் முன் எதைச் செய்தாலும் அவற்றைக் கவனித்துச்செய்ய வேண்டிய பொறுப்பு உங்களிடம் இருக்கிறது என்பதை நினைவில்கொள்ளுங்கள்.
43. விமர்சகராக நீங்கள் இருந்தால், விமர்சிக்கும் பழக்கமும் உங்களிடமிருந்தே குழந்தைகளுக்கும் தொற்றிக்கொள்ளலாம். இதுவே, பின்னாளில் குழந்தைகள் புறம்பேசுவது, மற்றவர்களை விமர்சிப்பது, குறைத்து மதிப்பிடுவது போன்ற செயல்களில் ஈடுபடக் காரணமாகலாம்.
கூடி வாழச் சொல்லிக்கொடுங்கள்!
44. அவசர உலகில் கூட்டுக் குடும்பம் என்பது எல்லா இடங்களிலும் சாத்தியம் ஆகாது. ஆனால், வருடத்துக்கு இருமுறையாவது உறவுகள், நண்பர்களுடன் சேர்ந்து வெளியில் நேரம் செலவழிப்பது நல்லது. கூடியிருக்கும் தருணங்களில் ஏற்படும் மகிழ்ச்சி, பகிர்தல், அன்பு செலுத்துதல், உறவுகளின் மதிப்பு போன்றவற்றை குழந்தைகள் எளிதில் உணர, இது ஒரு வாய்ப்பாக அமையும்.
கூடி வாழச் சொல்லிக்கொடுங்கள்!
44. அவசர உலகில் கூட்டுக் குடும்பம் என்பது எல்லா இடங்களிலும் சாத்தியம் ஆகாது. ஆனால், வருடத்துக்கு இருமுறையாவது உறவுகள், நண்பர்களுடன் சேர்ந்து வெளியில் நேரம் செலவழிப்பது நல்லது. கூடியிருக்கும் தருணங்களில் ஏற்படும் மகிழ்ச்சி, பகிர்தல், அன்பு செலுத்துதல், உறவுகளின் மதிப்பு போன்றவற்றை குழந்தைகள் எளிதில் உணர, இது ஒரு வாய்ப்பாக அமையும்.
45. டி.வி., வீடியோ கேம், செல்போன் பயன்பாட்டைக் குறையுங்கள். புதிய தொழில்நுட்பங்களைச் சிறு வயதிலே தெரிந்துகொள்வது நல்லதுதான். ஆனால், அதுவே அவர்களின் உலகமாக மாறிவிடக் கூடாது. பின்னாட்களில் சிறு வயதில் விளையாடக்கூடிய விளையாட்டுக்கள், அதன் மூலம் கிடைக்கும் அனுபவங்கள் இல்லாமல், தனித்து வாழப் பழகிக்கொள்ள நேரிடும்.
46. சாப்பிடும் முன்னர், சாப்பிட்ட பிறகு, மலம், சிறுநீர் கழித்த பிறகு கை கழுவ வேண்டியதன் அவசியத்தைச் சொல்லிக்கொடுக்க வேண்டும். தும்மல் வந்தால், கைகுட்டையால் மூட வேண்டும், பொது இடங்களில் மூக்கை நோண்டுவது, வாயில் கைவைப்பது போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும் என்பன போன்ற அடிப்படை பர்சனல் ஹைஜீனை அவசியம் கற்றுக்கொடுக்க வேண்டும்.
46. சாப்பிடும் முன்னர், சாப்பிட்ட பிறகு, மலம், சிறுநீர் கழித்த பிறகு கை கழுவ வேண்டியதன் அவசியத்தைச் சொல்லிக்கொடுக்க வேண்டும். தும்மல் வந்தால், கைகுட்டையால் மூட வேண்டும், பொது இடங்களில் மூக்கை நோண்டுவது, வாயில் கைவைப்பது போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும் என்பன போன்ற அடிப்படை பர்சனல் ஹைஜீனை அவசியம் கற்றுக்கொடுக்க வேண்டும்.
டின்னர் டைம்... ஃபேமிலி டைம்!
47. பெற்றோர் இருவரும் வேலைக்குச் செல்லும் சூழலில் நாம் இருக்கிறோம். குழந்தைகளோடு அதிகம் நேரம் செலவழிக்க இயலவில்லை. பலரும் அவர்களது குழந்தைகளுக்கு நேரத்தைக் கொடுக்காமல், பரிசுப் பொருட்களையும் நொறுக்குத்தீனிகளையும் வாங்கித் தருகின்றனர். உண்மையில், குழந்தைகளுடன் நேரம் செலவழிப்பதுதான் முக்கியம். பரிசுப் பொருட்களோ, தின்பண்டமோ அதற்கு இணையாகாது.
48. பேசவோ, இணைந்து செயல்படவோ டின்னர் டைமை ஃபேமிலி டைமாக மாற்றிக்கொள்வது நல்லது. அன்றைய நாளில் அவர்கள் என்னென்ன செய்தார்கள் என்பதை இரவில் பேசித் தெரிந்துகொள்ளுங்கள்.குழந்தைப் பருவத்தில் நடக்கும் விஷயங்கள்தான், அவர்களின் வாழ்க்கையையே வடிவமைக்கும்.
அதிகாலையில் எழும் பழக்கம்
49. காலையில் எழுந்திருப்பதுதான் இன்று நிறைய பேருக்கு முடியாத காரியம். சிறு வயதில் பழகத் தவறிவிட்டதால் ஏற்படும் சிக்கல் இது.
சிறு வயதிலிருந்தே ‘முன் தூங்கி முன் எழும்’ பழக்கத்தை மேற்கொண்டால், பெரியவர்களானதும் சோம்பலைத் தவிர்க்க முடியும். அதிகாலை எழும் பழக்கம், உடலுக்கு ஆரோக்கியத்துடன், மனதுக்கு அமைதியையும் தரும். உடலின் கடிகார சுழற்சி சீராக இயங்கும். நோயின்றி ஆரோக்கியமாக வாழ உதவும்.
47. பெற்றோர் இருவரும் வேலைக்குச் செல்லும் சூழலில் நாம் இருக்கிறோம். குழந்தைகளோடு அதிகம் நேரம் செலவழிக்க இயலவில்லை. பலரும் அவர்களது குழந்தைகளுக்கு நேரத்தைக் கொடுக்காமல், பரிசுப் பொருட்களையும் நொறுக்குத்தீனிகளையும் வாங்கித் தருகின்றனர். உண்மையில், குழந்தைகளுடன் நேரம் செலவழிப்பதுதான் முக்கியம். பரிசுப் பொருட்களோ, தின்பண்டமோ அதற்கு இணையாகாது.
48. பேசவோ, இணைந்து செயல்படவோ டின்னர் டைமை ஃபேமிலி டைமாக மாற்றிக்கொள்வது நல்லது. அன்றைய நாளில் அவர்கள் என்னென்ன செய்தார்கள் என்பதை இரவில் பேசித் தெரிந்துகொள்ளுங்கள்.குழந்தைப் பருவத்தில் நடக்கும் விஷயங்கள்தான், அவர்களின் வாழ்க்கையையே வடிவமைக்கும்.
அதிகாலையில் எழும் பழக்கம்
49. காலையில் எழுந்திருப்பதுதான் இன்று நிறைய பேருக்கு முடியாத காரியம். சிறு வயதில் பழகத் தவறிவிட்டதால் ஏற்படும் சிக்கல் இது.
சிறு வயதிலிருந்தே ‘முன் தூங்கி முன் எழும்’ பழக்கத்தை மேற்கொண்டால், பெரியவர்களானதும் சோம்பலைத் தவிர்க்க முடியும். அதிகாலை எழும் பழக்கம், உடலுக்கு ஆரோக்கியத்துடன், மனதுக்கு அமைதியையும் தரும். உடலின் கடிகார சுழற்சி சீராக இயங்கும். நோயின்றி ஆரோக்கியமாக வாழ உதவும்.
No comments:
Post a Comment