Wednesday, June 24, 2015

சளி, இருமலை போக்கும் சுக்கு மல்லி காபி


சளி, இருமல் போன்றவற்றிற்கு சுக்கு மல்லி காபி குடித்தால், உடனே சளி மற்றும் இருமல் நின்றுவிடும். 

சுக்கு காபி பொடிக்கு :

சுக்கு - 1/2 கப் 
மல்லி - 1/4 கப் 
மிளகு - 1/2 டீஸ்பூன் 
சீரகம் - 1/2 டீஸ்பூன் 

சுக்கு காபிக்கு தேவையான பொருட்கள் :

தண்ணீர் - 2 கப் 
சுக்கு காபி பொடி - 2 டீஸ்பூன் 
பனங்கற்கண்டு - தேவையான அளவு 

செய்முறை: 

• முதலில் சுக்கு மல்லி பொடிக்கு கொடுத்துள்ள பொருட்களை ஒவ்வொன்றாக வாணலியில் போட்டு பொன்னிறமாக வறுத்து இறக்கி குளிர வைத்து மிக்ஸியில் போட்டு பொடி செய்து கொள்ள வேண்டும். 

• ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து கொதிக்க விட வேண்டும். தண்ணீரானது கொதிக்க ஆரம்பித்ததும், அதில் 2 டீஸ்பூன் சுக்கு பொடியை சேர்த்து, பின் அதில் பனங்கற்கண்டு சேர்த்து 5 நிமிடம் நன்கு கொதிக்க விட வேண்டும். 

• அதில் உள்ள கற்கண்டு கரைந்ததும், அதனை இறக்கி வடிகட்டினால், சுக்கு மல்லி காபி ரெடி!!! 

• பனங்கற்கண்டுக்கு பதிலாக தேன் அல்லது கருப்பட்டியும் சேர்த்து கொள்ளலாம்.


No comments:

Post a Comment