Saturday, June 27, 2015

ஒற்றைத் தலைவலி! (மைக்ரேன்)


பரம்பரைக் குறைபாட்டால் வரும் ஒற்றைத் தலைவலி இது. பெண்களை அதிகம் தாக்கும் என்பதால் இதை ‘பெண்களுக்கான தலைவலி’ என்று சொல்லலாம். மன அழுத்தம், சேராத உணவுப் பொருட்கள், அதிக வெளிச்சம், தூக்கம் இன்மை அல்லது அதிகத் தூக்கம், சாப்பிடாமல் இருப்பது, தலையில் காயம்படுதல் போன்ற காரணங்களால் இந்த ஒற்றைத் தலைவலி தூண்டப்படும். பெண்களுக்கு மாதவிலக்கு நேரத்தில் ஒற்றைத் தலைவலி அதிகமாகும். அதுவே, மெனோபஸ் காலத்துக்குப் பிறகு பெண்களுக்கு ஒற்றைத் தலைவலி குறைந்துவிடும். ஆனால், 50 வயதுக்கு மேற்பட்ட ஆண்களுக்கு ஒற்றைத் தலைவலி ஆரம்பித்துவிடும். ஒற்றைத் தலைவலி வருவதற்கு முன், கண் பார்வை மங்குவது, கண்களுக்கு முன் அலை அலையாக மாயத்தோற்றம் ஏற்படுவது, வாந்தி வரும் உணர்வு... போன்ற அறிகுறிகள் தென்படும்.

No comments:

Post a Comment