Wednesday, July 15, 2015
முதுமையை விரட்டி என்றும் இளமையாக காட்சி தர உதவும் நெல்லிக்காய்
நெல்லிக்கனி சோகையைப் போக்கக் கூடியது, திசு வளர்ச்சி, தசை வளர்ச்சிக்கு உதவக் கூடியது. வாந்தியைத் தணிக்க வல்லது. இருமலைப் போக்க வல்லது. வற்றச் செய்யும் தன்மை வாய்ந்தது. ரத்தக் கசிவைக் குணப்படுத்தக் கூடியது. பேதியைக் கட்டுப்படுத்தக் கூடியது. சிறுநீரைப் பெருக்க வல்லது.
சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்த வல்லது. அகட்டுவாய்வகற்றி, சோர்வினைப் போக்க வல்லது. மஞ்சள் காமாலை, பசியின்மை, சீதபேதி, கண் பார்வைக் கோளாறு ஆகியவற்றுக்குகு மருந்தாகிக் குணம் தருவது மட்டுமின்றி சீரண உறுப்புகளுக்கு பெரும் பலமாக அமைவது. நெல்லியின் இலை பித்தத்தைப் போக்கவல்லது, ஆஸ்துமா என்னும் இரைப்பு நோயைத் தணிக்கக் கூடியது.
நெஞ்சகச் சளியை நீக்க வல்லது. நெல்லிமரப்பட்டை வற்றச் செய்யும் தன்மையுடையது. நெல்லி இலைச்சாறு வாந்தியை நிறுத்தவல்லது. நெல்லி அமிலச் சுரப்பைக் கட்டுப்படுத்தவல்லது. நெல்லிக்கனியில் அபரிமிதமான விட்டமின் சி சத்து அடங்கி இருக்கிறது. அதுமட்டுமின்றி தாது உப்புக்கள், அமினோ ஆசிட்டுகள் ஆகியவையும் மிகுதியாக இருக்கின்றது. நெல்லியின் சதைப் பகுதியில் புரதச்சத்தோடு விட்டமின் சி சத்து என ஆப்பிள் பழத்தோடு ஒப்பிடுகையில் இரண்டு சத்துக்களும் செரிந்துள்ளன.
மேலும் ஆப்பிளை விட பன்மடங்கு தாது உப்புக்களையும் அமினோ ஆசிட்களையும் அதிகமாகப் பெற்று விளங்குகிறது. நெல்லியில் உள்ள பில்லெம்பின் என்னும் மருத்துவ வேதிப்பொருள் மனித உடலின் மத்திய நரம்பு மண்டலத்தின் உளைச்சலைப் போக்குவதோடு, கடுப்போடு கூடிய வலியையும் தணிக்கும் குணம் வாய்ந்தது. நெல்லி இலைகளில் கேலிக் ஆசிட் என்னும் அமிலச்சத்தும் அடங்கியுள்ளது. ஒரு கிராம் காய்ந்த நெல்லியில் 10.8 மி.லி. சாலிக் அமிலம் உள்ளது.
மேலும் அஸ்கார்பிக் என்னும் ஆசிட் என்னும் விட்டமின் சி உடன் மூசிக் அமிலம் என்னும் மருத்துவப் பொருளும் பொதிந்துள்ளது. நெல்லிக் காயில் சூப்பர் ஆக்ஸைட்டிஸ் முடேட்ஸ் 482.14 அளவு/ கிராம் உள்ளது. இந்த வேதிப் பொருள் வயது முதிர்வைத் தடுத்து இளமையைத் தக்க வைக்க உதவுகின்றது. நெல்லிச் சாற்றில் இருக்கும் சாலிக் ஆசிட் சோர்வு போக்க கூடியதாக உதவுகின்றது.
நெல்லிக் கனியும் சாறும் ரத்தத்தில் சேரும் கொழுப்புச் சத்தையும் குறைத்திட கொழுப்புச் சத்தையும் ட்ரைகிளிரைட்ஸ் என்னும் கொழுப்புச் சத்தையும், பாஸ்போலிபிட்ஸ் என்னும் கொழுப்புச் சத்தையும் குறைக்க வல்லது. மேலும் உயர் திட கொழுப்புச் சத்தை பாதிக்காமல் நிலைப்படுத்துகிறது. இதனால் ரத்த நாளங்களில் ஏற்படும் அடைப்பு தடுக்கப்பபட்டு இதயம் சீராக இயங்க உதவுகின்றது.
நெல்லிக்காய் பற்றி இந்திய மருத்துவம்:
* நெல்லி விதையைப் பொடித்து உள்ளுக்கு மருந்தாகப் பயன்படுத்தலாம். உடலின் வெப்பத்தைக் தணித்து குளிர்ச்சியுண்டாக்கவும், பித்தத்தை தணிக்கவும் வாந்தியைப் போக்கவும் இதன் விதையைப் பொடித்துப் கொடுப்பதுண்டு.
* நெல்லி விதையைத் தீ நீராக்கி காய்ச்சலைத் தணிக்க கொடுப்பதுண்டு. மேலும் நீரிழிவைக் கட்டுப்படுத்தவும் நெல்லி விதையைத் தீ நீராக்கி கொடுப்பர்.
* இலைகளை நீரிலிட்டு ஊற வைத்து எடுத்த நீரைக் கொண்டு கண்களைக் கழுவுவதற்கு உபயோகிப்பர். கண்ணோய்கள் பலவும் இதனால் குணமாகும்.
* நெல்லி மரத்தின் வேர்ப் பட்டையைச் சூரணித்து நன்கு சலித்து வைத்துக் கொண்டு தேனில் குழைத்து நாப்புண், வாய்ப்புண்களுக்குத் தடவி வர விரைவில் குணமாகும்.
* நெல்லி மரப்பட்டை சூரணத்தை அதிசார பேதிக்கு (நீராய் வெளியாகும் கழிச்சல்) கொடுக்க அதிவிரைவில் குணம் உண்டாகும்.
* நெல்லி இலைக் கொழுந்தை அரைத்து மோரில் கொடுக்க சீத பேதி குணமாகும்.
* நெல்லி வேரினால் வாந்தி, வாய்ச்சுவையின்மை, முத்தோஷக் கோபம் (வாத, பித்த, சிலேத்தும சீற்றம்) மலச்சிக்கல், காய்ச்சல், சன்னிதோஷம் ஆகியன போகும்.
* நெல்லி இலைக் கசாயத்தை தயார் செய்து ஆற வைத்து வாய் கொப்புளிக்க வாய்ப்புண் ஆறிவிடும்.
* நெல்லி மரப் பூக்களை சேகரித்துக் காய வைத்துப் பொடித்து வைத்துக் கொண்டு உள்ளுக்குக் கொடுப்பதால் உடல் வெப்பம் தணிவதோடு மலச்சிக்கலும் மறைந்து போகும்.
* நெல்லி மர வேரினின்று தயாரிக்கப்படும் நெல்லிப் புளிப்பு (காடி) காமாலை, இருமல், குன்மம் இவற்றைப் போக்கும்.
* நெல்லி இலையை நீரிலிட்டு ஊறவைத்து அந்த நீரை தெளிவாகக் கொண்டு உடன் சோம்பு சேர்த்து உள்ளுக்குக் கொடுக்க கிராணிக் கழிச்சல் என்னும் நீர்த்தபேதி நீங்கிப் போகும்.
* நெல்லிக்காயை இடித்து எண்ணெயில் இட்டுக் காய்ச்சிய தைலத்தை தலைக்குத் தடவி வருவதால் கூந்தல் கருமையும், செழுமையும், மென்மையும், அடர்த்தியுமாக வளர வழி செய்யும்.
* நெல்லி வற்றலை சூரணித்து உள்ளுக்குக் கொடுப்பதால் மலச்சிக்கல் மறைந்து போவதோடு- சீரண உறுப்புகளையும் சீர்செய்து பலப்படுத்தும்.
* நெல்லி மர வேரை உலர்த்தி இடித்து சூரணித்து அதனோடு மேல்தோல் நீக்கிய எள்ளையும் சேர்த்துச் சாப்பிட மூளை நரம்புகளுக்கு பலம் ஏற்பட்டு ஞாபக சக்தியை மேம்படுத்தும். மூளையின் உறுப்புகளை பலப்படுத்த இது ஓர் சிறந்த மருந்தாகும்.
* நெல்லிக்காயை ஊறுகாய் இட்டு சாப்பிட மூக்கில் நீர் வடிதல், மூக்கடைப்பு, தலை சுற்றல், பைத்தியம், வாயில் நீர் அதிகம் சுரத்தல், மலச்சிக்கல், பிரமேகம் ஆகியன நீங்கும்.
* நெல்லி வற்றல் தீநீர் உடல் உஷ்ணம், பித்த மயக்கம், ஓக் காளம், குமட்டல், பசியின்மை முதலிய நோய்களை குணப்படுத்தும்.
* பச்சை நெல்லியை அரைத்து தொப்புளின் கீழ் பூசி வைக்க நீர்க்கட்டு உடையும். சிறுநீர் தாராளமாய் இறங்கும்.
* நெல்லிச் சாற்றோடு திராட்சை சாறு, தேன் கலந்து பருகுவதால் காய்ச்சல், அதி சாராபேதி, நாவறட்சி ஆகியன குணமாகும்.
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment